Disqus Shortname

உத்திரமேரூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்

உத்திரமேரூர் ஜன,18
உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
நடைப்பெற்றது. முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாதேவி தலைமை தாங்கினார். பொது சுகாதாரத் துறை இணை இயக்குனர் செல்வவினாயகம், காஞ்சி மாவட்ட மலேரியா அலுவலர் பரணிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். மானாம்பதி சமுதாய சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தாமரைச்செல்வன் வரவேற்றார். காஞ்சிபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். இம்முகாமில் பேரூராட்சி மன்ற தலைவர் சுமதி, துணைத் தலைவர் தயாளன், நேர்முக உதவியாளர்
சீனுவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகிகள்  உட்பட பலர் பங்கேற்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் மொத்தம் 127 இடங்களில் போலியோ செட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. இம்முகாம்களில் 14,587 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

No comments