Disqus Shortname

உத்திரமேரூரில் அரசு கலை மற்றும அறிவியல் கல்லூரி கட்டிட அடிக்கல் நாட்டு விழா

உத்திரமேரூர் ஜன, 26

உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் ஊராட்சியில் 7 கோடி மதிப்பில் 10
ஏக்கர் நிலப்பரப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடிக்கல் நாட்டு
விழா நேற்று நடைபெற்றது. உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத்
பா.கணேசன் தலைமை தாங்கினார். திருப்புலிவனம் ஊராட்சி மன்ற தலைவர்
சரளாபிரகாஷ்பாபு முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் கார்வண்ணன்
அனைவரையும் வரவேற்றார். 7 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரி கட்டிடத்திற்கு காஞ்சி மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம்
பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். விழாவில் ஒன்றிய
செயலாளர்கள் பிரகாஷ்பாபு, அண்ணாமலை, தாசில்தார் பேபிஇந்திரா, துணைச்
சேர்மென் ரவிசங்கர் வாலாஜாபாத் சேர்மென் வரதராஜீலு, சசிகுமார் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.

No comments