உத்தரமேரூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
(24 Jan)
:புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் உத்தரமேரூரில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு
முகாம் நடைபெற உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம்
அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம்
மாவட்டத்தில் குன்றத்தூர், மதுராந்தகம், அச்சிறுபாக்கம், மற்றும்
உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் புதுவாழ்வு திட்டத்தின் கீழ்
நலிவுற்ற குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு
மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சனிக்கிழமை
(ஜனவரி 24) உத்தரமேரூரில் உள்ள மீனாட்சியம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில்
இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த
வேலை வாய்ப்பு முகாமில், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள்
நிறுவனத்திற்கு தேவையான தகுதி பெற்ற நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த
அரிய வாய்ப்பினை பயன்படுத்தி 8-ஆம் வகுப்பு, பட்டயம், பட்டதாரி இளைஞர்கள்,
இளம்பெண்கள் கலந்து கொள்ளலாம். முகாமுக்கு வரும்போது தங்களது பள்ளி,
கல்லூரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், குடும்ப அட்டை, 3
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் கொண்டு
வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments