உத்திரமேரூரில் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
உத்திரமேரூர் ஜன,24
உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் தொழில்நுட்ப கல்லூரியில்
இன்று காஞ்சி மாவட்ட புதுவாழ்வு திட்டம் சார்பில் இளைஞர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. புதுவாழ்வு திட்ட மேலாளர் பி.தனசேகரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கவிராஜன் வரவேற்றார். காஞ்சி மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்து 5 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி சிறப்புரையாற்றினார். இம்முகாமில் ஊரக பகுதியில் உள்ள வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் 15 நிறுவனங்கள் கலந்து தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் தொழில்நுட்ப கல்லூரியில்
இன்று காஞ்சி மாவட்ட புதுவாழ்வு திட்டம் சார்பில் இளைஞர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. புதுவாழ்வு திட்ட மேலாளர் பி.தனசேகரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கவிராஜன் வரவேற்றார். காஞ்சி மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்து 5 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி சிறப்புரையாற்றினார். இம்முகாமில் ஊரக பகுதியில் உள்ள வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் 15 நிறுவனங்கள் கலந்து தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் கலந்து கொண்டனர்.
No comments