Disqus Shortname

உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லாததால் ஊராட்சி அலுவலர் பலி

உத்திரமேரூர் ஜன 22
உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அரசு ஊழியர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவேடு ஊழியராகப் பணிபுரிந்து வந்தவர் விருத்தாச்சலம் (56).
இவருக்கு செவ்வாய்க்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக இவரை உத்தரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவசர சிகிச்சை அளிக்கக் கூட மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை. இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் அவர் மரணமடைந்தார்.
இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாபிரெட்டிபட்டி. இவருக்கு ராதிகா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். உத்தரமேரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

No comments