Disqus Shortname

தேர்தலுக்கு தயாராக நிர்வாகிகளுக்கு தி.மு.க., செயலர் அறிவுரை

உத்திரமேரூர் ஜன13
உத்திரமேரூர்: தேர்தல் நெருங்குவதால், கட்சியை பலப்படுத்தும் பணியில், நிர்வாகிகள், தங்களை தீவிரமாக்கி கொள்ளுங்கள் என, தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத் தில், அக்கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலர் கூறியுள்ளார்.
சாலவாக்கம் ஒன்றிய, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம், மாலை 6:00 மணிக்கு சாலவாக்கத்தில் நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலர் சுந்தர் கலந்து கொண்டு, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தமிழகத்தில், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கான பணியினை நிர்வாகிகள், தற்போதே தங்கள் பகுதிகளில் துவக்கி விட வேண்டும். தி.மு.க., இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி போன்றவை ஒன்றிணைந்து, கிளைகள் தோறும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என, நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். சாலவாக்கம் ஒன்றிய தி.மு.க., செயலர் குமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில்,
 ஒன்றிய அவைத்தலைவர் என்.எஸ். ரவி தலைமை தாங்கினார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், ஒன்றிய துணைச்செயலளாளர் தமிழ்வேந்தன் முன்னிலை வகித்தனர். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் கலந்தக்கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் புதிய  உறுப்பினர் சேர்க்கை சேர்த்தல், பொங்கல் திருநாளன்று  தமிழ் புத்தாண்டை அவரவர் பகுதிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும். வாக்காளர் பதிவேட்டில்  வாக்காளர்களை சரிபார்க்க வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  மாவட்ட  விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் கெ.ஞானசேகரன், டி.கே.கோபாலகிருஷ்ணன்  மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். முடிவில்  ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணி நன்றி கூறினார்.சாலவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தி.மு.க., ஊராட்சி செயலர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments