Disqus Shortname

உத்திரமேரூர் அருகே கோர விபத்து: 2 பேர் பலி

பாபு மற்றும் செல்வம்
உத்திரமேரூர் ஜன16: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பாபு (35), செல்வம் (27) இருவரும் சென்னையில் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். நேற்று பொங்கல் பண்டிகையை கொண்டாட பாபுவுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது
பாபுவுக்கு சொந்தமான பைக்
உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் என்ற இடத்தில் சாலை வளைவில் சென்ற போது எதிரே வந்த தனியார் பஸ்சும் மோட்டார் பைக்கும் நேருக்கு நேர் மோதியது.  இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே   பாபு மற்றும் செல்வம் பரிதாபமாக உயிரிழந்தனர்  விபத்து குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

மேற்கொண்டு வருகின்றனர்.பொங்கல் பண்டிகையில் 2 பேர்
இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


No comments