Disqus Shortname

பொற்பந்தலில் அம்மா திட்ட முகாம்

உத்திரமேரூர் ஜன,09
  உத்திரமேரூர் தாலுக்கா பொற்பந்தல் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் இ.செந்தாமரை ஏகாம்பரம் தலைமை தாங்கினார்.  தனி வட்டாட்சியர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். பெறப்பட்ட மொத்த  மனுக்கள் 61 ஏற்பு மனு 25 நிலுவை 36 உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் கே.கிருபாகரன் தெரிவித்தார்.  உத்திரமேரூர் தொகுதி சட்ட பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு 15 பயனாளிகளுக்கு குடும்ப அட்டையும் 15 நபர்களுக்கு வேட்டி, சேலையும் வழங்கி தமிழக அரசை பாராட்டி பேசினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியகுழு பெருந்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், வாலாஜாபாத் சேர்மென் என்.எம்.வரதராஜிலு, தண்டரைதணிகைவேல்,ஆகியோர் கலந்துகொண்டனர். வருவாய் ஆய்வாளர் பெருமாள் நன்றி கூறினார்.

No comments