உத்திரமேரூரில் எம்.ஜி.ஆர் 98-வது பிறந்தநாள் விழா
உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில் சனிக்கிழமையன்று
ஒன்றிய அதிமுகவின் சார்பில் எம்.ஜி.ஆர் 98-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
உத்தரமேரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர். அண்ணாமலை தலைமை தாங்கினார். ஒன்றிய
குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன். ஒன்றிய குழுதுணைத் தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை
வகித்தனர். உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத்பா.கணேசன் கலந்து கொண்டு
உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து
இனிப்புகள் வழங்கினார். பொ.சசிகுமார்,
தங்கபஞ்சாட்சரம், கா.ஜெயவிஷ்ணு, இ.தயாளன், அ.பி.சத்திரம்ஜி.பெருமாள், உட்பட பலர் கலந்து கொண்டனர். உத்திரமேரூர்
தாலுக்கா மானாம்பதிகண்டிகையில் எம்.ஜி.ஆர்.படத்திற்கு லூசியா ஜேம்ஸ் மாலை
அணிவித்தார். பெருநகர் ஊராட்சி மன்றதலைவர் விஜயக்குமார் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை
அணிவித்தார். ஒன்றியகுழு உறுப்பினர் கருணாகரன் இனிப்புகள் வழங்கினார்.
No comments