Disqus Shortname

உத்திரமேரூரில் காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்

உத்திரமேரூர் ஜன 21

ஸ்ரீரங்கம்: திமுக வெற்றிக்கு பணியாற்ற தீர்மானம்
  உத்திரமேரூரில் காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் செயற்குழு  கூட்டம் நேற்று நடைபெற்றது. உத்திரமேரூர் தி.மு.க ஒன்றிய கழக செயலாளர் ஞானசேகரன், காஞ்சி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பொன்மொழி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.நாகன், மோகன்தாஸ், ஜனனிகிருஷ்ணமூர்த்தி, முன்னிலை வகித்தனர். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் பேசியது. திருவரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் என்.ஆனந்த் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தேர்தல் பணியில் 322 வாக்குசாவடிகள் உள்ளன. இத்தொகுதியில் 2 லட்சத்து 70ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர் காஞ்சி தெற்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் இரவு பகல் பாராமல் தீவிரமாக தேர்தல் பணியாற்றிட வேண்டும். என்று கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சுகுமார், மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை,  பேரூராட்சி மன்ற தலைவர் சுமதிகுணசேகரன், வக்கீல் ரமேஷ்பாபு, சாலவாக்கம் ஒன்றிய கழக
செயலர் டி.குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். நகர கழக செயலாளர்
என்.எஸ்.பாரிவள்ளல் நன்றி கூறினார்
.

No comments