Disqus Shortname

அனுமந்தண்டலம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

உத்திரமேரூர் 27

உத்திரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் ஊராட்சியில் நேற்று வட்ட சட்ட பணிகள்
குழு சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் ஊராட்சி
மன்ற தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். துணை தலைவர் பஞ்சரத்தினம்
முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள் ஆறுமுகம், டி.கிருஷ்ணன் ஆகியோர்
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் அக்டோபர்-2014
முதல் டிசம்பர்-2014 முடிய ஊராட்சி நிதிகள் மற்றும் ஊராட்சி செலவீனங்கள்
குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதிய உயர் நிலை நீர்தேக்கத் தொட்டி
அமைத்தல், பவர் பம்புகள், சேளார் தெருவிளக்குகள் அமைத்தல் குறித்து
விவாதிக்கப்பட்டது, துய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களை
துய்மை படுத்துதல், பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை முற்றிலும் தவிர்தல்,
கழிவு நீர் தேங்காமல் கிராமப்புற தூமையாக பாதுகாத்தல் போன்ற தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
வளாகத்தில் 50திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு முத்த நிர்வாகி இராமலிங்கம் சிறப்பாக
செய்திருந்தார்.

No comments