Disqus Shortname

உத்திரமேரூர் தி.மு.க விவசாய அணியின் தமிழ்புத்தாண்டு பொங்கல் திருவிழா

உத்திரமேரூர்  ஜன,12
 உத்திரமேரூரில் காஞ்சி மாவட்ட தி.மு.க விவசாய அணி சார்பில் பேரூந்து

நிலையத்தில்   தமிழ்புத்தாண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது. மாவட்ட
விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை தலைமை தாங்கினார், ஒன்றிய
செயலாளர் கெ.ஞானசேகரன் முன்னிலையில் பொங்கல் விழா சிறப்பாக
கொண்டாடப்பட்டது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், தலைமை
செயற்குழு உறுப்பினர்  இரா.நாகன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை
தொடங்கி வைத்தனர். நாதஸ்வர மங்கள இசையுடன் தொடங்கிய விழாவில்
பம்பைஉடுக்கை,  கைசிலம்பு, நாட்டுபுறப்பாடல்கள், கட்டக்கட்டிகூத்து,
பரதநாட்டியம் போன்ற பழங்கால கிராமிய  கலைநிகழ்ச்சிகள்  நடைபெற்றன.
பொங்களுக்கு தேவையான இலவச பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றதலைவர் சுமதிகுணசேகரன், கி.மனோகரன்,
பேரூர் செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல், டி.கே.கோபாலகிருஷ்ணன்,  மற்றும்,
மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய
விவசாய அணி துணை அமைப்பாளர் சு.நாகப்பன் நன்றி கூறினார்.

No comments