Disqus Shortname

உத்திரமேரூர் வழக்கறிஞர்கள் சங்க வெள்ளிவிழா சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் பங்கேற்பு

உத்திரமேரூர் ஜன, 24

 காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டத்தில் உள்ள மாவட்ட உரிமையியல்
மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின்  பார்அசோசியேஷன் வழக்கறிஞர்
சங்கத்தின் சங்க உறுப்பினர் எஸ்.பிரேம்குமார் வழக்கறிஞராக 25 ஆண்டுகாலம்
பணிபுரிந்ததை பாராட்டும் வகையில் நேற்று உத்திரமேரூர் வழக்கறிஞர்
சங்கத்தின் சார்பாக வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. உத்திரமேரூர் பார்
அசோஷியேஷன் சங்கத்தின் தலைவர் அ.கருணாநிதி வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்
வி.ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு வழக்கறிஞராக 25ஆண்டுகள் பணியாற்றி
வரும் வழக்கறிஞர் எஸ்.பிரேம்குமாரை பாராட்டி பேசினார். எஸ்.பிரேம்குமார்
அனைத்து வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து
ஏற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு
நீதிபதி பி.ராஜமாணிக்கம், காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி(II) கே.பரமராஜ்,
உத்திரமேரூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி
எம்.ஜெயசங்கர், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர்கள்
எம்.வரதன், கே.கே.எஸ்.ஜெயராமன் ஆகியோர் மற்றும் செங்கல்பட்டு,
காஞ்சிபுரம், மதுராந்தகம், பகுதி வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் நிறைவில் உத்திரமேரூர் பார் அசோசியேஷன் செயலாளர்  டி. கிருஷ்ணன்
நன்றி கூறினார்.

No comments