Disqus Shortname

தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

உத்தரமேரூர் மே, 31

உத்தரமேரூர் அடுத்த களியாம்பூண்டி துணை மின் நிலையத்திலிருந்து
உத்தரமேரூர், வேடபாளையம், காரணைமண்டபம், களியாம்பூண்டி, திருப்புலிவனம்,
மருதம், மாகரல், ஆர்ப்பாக்கம், இளையனார் வேலூர், காவாம்பயிர்,
அதவப்பாக்கம், படூர், செய்யாடுவாக்கம், பெருநகர், கூழமந்தல், தேத்துறை,
போன்ற பல்வேறு கிராமங்களுக்கு மின்சாரம் வியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில்  இளநகர் வழியாக பெருநகர் செல்லும் மின்ஒயர் இளநகர் சாலை
அருகில் உள்ள விவசாயி நிலத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் மிகவும்
தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்களும்,
விவசாயிகளும், மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இது மட்டுமின்றி தற்போது
ஏற்படும் பலத்த காற்றினால் ஓயர்கள் அங்கும் இங்கும் துண்டித்து விழும்
அபாயம் உள்ளது என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தார். இது குறித்து
மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சீர்செய்யுமாறு அப்பகுதி விவசாயிகள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments