Disqus Shortname

நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

உத்தரமேரூர் மே.29
உத்தரமேரூரில் புதன்கிழமையன்று அ.இ.அ.திமு.க காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர்  மரகதம்குமரவேல் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
 காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும்எம்.எல்..வுமான வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சி பன்னீர்செல்வம் தலைமையில் ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு முன்னிலையில், அ,தி,மு,கவினருடன் ஆதவப்பாக்கமத்திலிருந்து தொடங்கி திருவந்தவார் முடிய ஆகிய 45 கிராமங்களில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
பட்டாசுகள் வெடித்தும் எம்,பிக்கு சால்வை அணிவித்தும்  பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர். சேர்மென் ஆர்.கமலக்கண்ணன், வாலாஜாபாத் ஒன்றியகுழுத் தலைவர் என்.எம்.வரதராஜீலு, புலிவாய்  ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார், ஆதவப்பாக்கம் ஏ.ராமன், வி.கோதண்டன், திருவந்தவார் முருகன், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, காவாம்பயிர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments