Disqus Shortname

அகரம்தூளியில் 108 பால் குட அபிஷேகம்


உத்தரமேரூர் மே,14

உத்தரமேரூர் தாலுக்கா அகரம்தூளி நாயுடு சமூக  உறுப்பினர்கள்  5-ம் ஆண்டு
திருவிழா புதன்கிழமையன்று நடைபெற்றது. கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ.இளங்காளி அம்மனுக்கு காலை 9 மணியளவில் அகரம்தூளி குளக்கரையிலிருந்து 108 பால் குட ஊர்வலம் புறப்பட்டு  முக்கிய வீதியின் வழியாக சென்று பால்குட அபிஷேகமும் நடந்தது.  பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திருவீதி உலா வந்தது. பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டனர்.  இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன்

அருள் பெற்றனர்.

No comments