Disqus Shortname

பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை

உத்திரமேரூர் மே,11 

உத்திரமேரூர் அருகே, பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவி, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.உத்திரமேரூர் அடுத்த, காரணிமண்டபம் கிராமத்தைச் சேர்ந்த நாகப்பன் என்பவரின் மகள் நந்தினி, 18. இவர், களியாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து, தேர்வு எழுதி இருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், நந்தினி தேர்ச்சி பெறாததால், சோகத்தில் இருந்தார். நந்தினி தேர்வில் தோல்வி அடைந்தது குறித்து, அவரது பெற்றோர், வீட்டில் நந்தினியை திட்டியதாக கூறப்படுகிறது.இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், நந்தினி மாயமானார். அவரது உறவினர்கள் ஊர் முழுக்க தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று, காரணிமண்டபம் கிராமத்தின் விவசாய கிணறு ஒன்றில், நந்தினி பிணமாக மிதப்பதை அப்பகுதியினர் கண்டு, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.பெருநகர் போலீசார், நந்தினியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பெருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி தினமலர்  

No comments