Disqus Shortname

சாலவாக்கத்தில் மே தின விழா

உத்தரமேரூர் மே.01

உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மின் இணைப்பாளர் நல மத்திய சங்கத்தின் சார்பாக மே தின விழாவினை சாலவாக்கம் கிளை சங்கத்தினர் சங்க கொடியேற்றி ஏழை எளிய மக்களுக்கு இனிப்புடன் கூடிய அன்னதானம் வழங்கினார்கள். இவ்விழாவில் சங்க மாநில கௌரவத்தலைவர் பிச்சைப்பொருமாள் தலைமை தாங்கினார். மாநில தலைவர் மலர்,இரா.ஆறுமுகம் பொது செயலாளர் இராமலிங்கம்  மாநில கொள்கை பரப்பு செயலாளர் இரா.பன்னீர்செல்வம் மே தின வரலாற்றை எடுத்துரைத்து தொழிலாளர் ஒற்றுமையை வலியுறுத்தி விளக்கிப்பேசினார்கள். நேற்று சென்ட்ரலில் நடந்த குண்டுவெடிப்பு
சம்பவத்திற்கு மௌன அஞ்சலியும் ஆழ்ந்த இரங்களையும் தொழிற்சங்கத்தின்
சார்பில் தெரிவித்தார். காஞ்சி மாவட்ட மற்றும் கிளை சங்க
நிர்வாகிகள்,மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில்
கிளை செயலாளர் எஸ்.பாண்டியன் நன்றி கூறினார்.

No comments