உத்தரமேரூர் மேற்கு ஒன்றியத்தில் எம்.பி.மரகதம்குமரவேல் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
உத்தரமேரூர் மேற்கு
ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமையன்று காஞ்சிபுரம் தொகுதி நாடாளுமன்ற
உறுப்பினர் கு.மரகதம்குமரவேல் கொளுத்தும் வெய்யிலில் கிராமம் கிராமமாக
சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஒரு லட்சத்து
46 ஆயிரத்து 866 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற
செய்த வாக்காளர்களுக்கு காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,
எம்.எல்.ஏ.வுமான வாலாஜாபாத்பா.கணேசன் தலைமையில்
காஞ்சிஎம்.எல்.ஏ.வி.சோமசுந்தரம் , காஞ்சி நாடாளுமன்ற தனி தொகுதி
பொறுப்பாளர் சிட்லப்பாக்கம்எஸ்.ராஜேந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள்
வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு முன்னிலையில் கருவேப்பம்பூண்டியில்
துவங்கி உத்தரமேரூர்பேரூராட்சி அனைத்து வார்டுகளிலும் சென்று வாக்களித்த
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பொதுமக்கள் எம்.பி.க்கு ஆரத்தி
எடுத்து சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
காஞ்சி.பன்னீர்செல்வம், தும்பவனம்ஜீவானந்தம், சேர்மென்ஆர்.கமலக்கண்ணன்,
துணைச்சேர்மென் அ.ரவிசங்கர், தொகுதிசெயலாளர்கே.ஆர்.தருமன், கருவேப்பம்பூண்டி
ஊராட்சி மன்ற தலைவர் கௌரிமுனுசாமி, முருக்கேரி ஊராட்சி மன்றத்தலைவர்
தனபால், களியாம்பூண்டி ஒன்றியக்குழு உறுப்பினர் தங்க.பஞ்சாட்சரம், புலியூர்
ஊராட்சி மன்றத்தலைவர் பி.பழனி, பொ,சசிக்குமார். ஓ.வி.வரதன் உட்பட
அ.தி.மு.கவினர் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments