Disqus Shortname

சாலவாக்கத்தில் முன்னாள் மாணவர்கள் முதுபெறும் ஆசிரியர்கள் பொன்விழா ஆண்டு சந்திப்பு கூட்டம்

உத்தரமேரூர் மே, 21


உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 1964 ல் பணிபுரிந்த ஆசிரியர்களும் பயின்ற மாணவர்களும் புதன்கிழமையன்று பொன் விழா சந்திப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடத்தினர்.
விழாவில் பள்ளி தலைமையாசிரியர் இராம்மோகன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.எம்.தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் ஸ்ரீராமுலு அனைவரையும் வரவேற்றார். இப்பள்ளியின் முதுபெறும் ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசுகளை முன்னாள் மாணவர்கள் வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் ஆர்.அப்துல்சர்தார் தொகுப்புரையாற்றினார். இவ்விழாவில் உத்தரமேரூர் சி.செல்வராஜ் முதுபெறும் ஆசிரியர்கள் எஸ்.கே.முருகேசன், ராஜமாணிக்கம், சி.டி.விஸ்வநாதன், மருத்துவர் பாலகிருஷ்ணன், நடராஜன், செல்லதுரை, சுந்தரம், கன்னியம்மாள், கே.ஏ.முத்து, இரா.துக்காராம் உட்பட பலர் வாழ்த்திப்பேசினார்கள். முடிவில் கனகராஜன் நன்றி கூறினார். 

No comments