Disqus Shortname

உத்தரமேரூரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

உத்தரமேரூர் மே.01

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமான நேற்று உத்தரமேரூரில் பாவோடு
தோப்புத் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில்
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினக்கருத்தரங்கு நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் 12 வது வார்டு உறுப்பினரும் கல்விக் குழு தலைவருமான
ரேவதி தலைமை தாங்கினார். புலியூர் வார்டு உறுப்பினர் ஞானசேகர் முன்னிலை
வகித்தார். புலியூர் ஜெஸ் பவுண்டேஷன் நிறுவனர் மேரிசார்லஸ், ஜெயம்
டிரஸ்ட் நிறுவனர் சுபா பள்ளித்தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி முன்னால் பள்ளி
ஆசிரியர் விமலாபானுமதி ஆகியோர் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதை
முற்றிலுமாக தடுத்து குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டும் குழந்தைகளை
பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பினால் உடனடியாக எங்களுக்கு தகவல்
தெரிவிக்க வேண்டும். குழந்தைகளுக்கான கல்வி முக்கியத்துவம் பற்றி
விளக்கவுரையாற்றினர். பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஜெஸ் பவுண்டேஷன் சிறப்பாக செய்திருந்தது.
முடிவில் சுரேஷ்குமார் நன்றி கூறினார்,

No comments