Disqus Shortname

காஞ்சிபுரம் எம்.பி., உத்திரமேரூரில் நன்றி ஊர்வலம்



உத்தரமேரூர் மே.24

உத்தரமேரூரில் சனிக்கிழமையன்று அ.இ.அ.திமு.க காஞ்சி நாடாளுமன்ற  உறுப்பினர்  மரகதம்குமரவேல் வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். தேர்தல் பொறுப்பாளர்  டாக்டர்.வா.மைத்ரேயன், காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், எம்.எல்..வுமான வாலாஜாபாத் பா.கணேசன் தொகுதி பொறுப்பாளர் காஞ்சி எம்.எல்..வி.சோமசுந்தரம் காஞ்சி பன்னீர்செல்வம் முன்னிலையில் உத்தரமேரூரில் உள்ள பெரியார், அண்ணா, டாக்டர்அம்பேத்கர், எம்.ஜீ.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பஜார் வீதி வழியாக நடந்து சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
பட்டாசுகள் வெடித்தும் எம்,பிக்கு சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்பளித்தனர். ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை கே.பிரகாஷ்பாபு, சேர்மென் ஆர்.கமலக்கண்ணன், துணைச்சேர்மென் அ.ரவிசங்கர், தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன், திருவந்தவார் முருகன், சந்திரமௌலி, கே.தயாளன், தங்க.பஞ்சாட்சரம், வி,அண்ணாதுரை, தொழிற்சங்கவேலாயுதம், எஸ்,சேகர், இளைஞரணி பொருளாளர் கா.ஜெயவிஷ்ணு உட்பட நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர் உத்தரமேரூர் ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் கோவிலிலும் வீரஆஞ்சிநேயர் கோவிலிலும் காஞ்சி நாடாளுமன்ற  உறுப்பினர்  மரகதம்குமரவேல் எம்.எல்.. வாலாஜாபாத் பா.கணேசன் தமிழக முதல்வர் ஜெயலலிதா நீடூழ வாழவும் அதிமுக 37 ததொகுதிகளிலும் வெற்றி பெற்றமைக்கு அர்ச்சைகள் செய்தனர்.

No comments