Disqus Shortname

உத்திரமேரூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை: வீடு இடிந்தது

உத்திரமேரூர்:

  உத்திரமேரூர் பகுதியில் இடி, மின்னலுடன்
அக்னி வெயில்  வாட்டி வதைக்கிறது. பொதுமக்கள் வெளியே செல்ல அஞ்சுகின்றனர். ஆனால் சில  இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. உத்திரமேரூர், கருவேப்பம்பூண்டி,  ஒழுகரை, அழிசூர், கலியாம்பூண்டி, காரணிமண்டபம, காரியமங்கலம் உள்ளிட்ட  பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் இடி, மின்னலுடன் திடீரென மழை  கொட்டியது. இதனால் சாலை, தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த  காற்றும் வீசியது.இந்நிலையில் அழிசூர் வடக்கு தெருவில் ஏழுமலை (65),  பொன்னம்மாள் (60) ஆகியோர் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தனர். அப்போது  வீசிய பலத்த காற்றால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இவர்கள்  வீட்டின் வெளியே இருந்ததால் இருவரும் உயிர் தப்பினர்.ஒழுகரையில் மின்கம்பம்  உடைந்து விழுந்தது. சில இடங்களில் மின் ஒயர்கள் அறுந்து கீழே விழுந்தது.  மின்தடையும் ஏற்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு சென்ற மின்சாரம் இன்று காலை  வரை வரவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.பலத்த மழை பெய்தது. பலத்த  காற்றும் வீசியதால் வீடு இடிந்தது. தம்பதி உயிர் தப்பினர்.

No comments