Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மது அருந்த அழைத்துச் சென்ற வாலிபருக்கு கத்திக் குத்து ஒருவர் கைது

உத்திரமேரூர் 30/05/2020
உத்திரமேரூர் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுணன் 35
லாரி டிரைவர், இவரது நண்பர் கிளார் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் 29. இந்நிலையில் அர்ஜுணன் வீட்டிற்கு சரத்குமார் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். இதனால் அர்ஜுணன் மனைவிக்கும் சரத்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்து ஆத்திரமடைந்த அர்ஜுணன் நேற்று சரத்குமாரை மது அருந்த அழைத்துள்ளார். இருவரும் உத்திரமேரூர் அடுத்த சித்தமல்லி கிராமம் அருகே காட்டுப்பகுதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அர்ஜுணனுக்கும் சரத்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் அர்ஜுணன் இடுப்பில் வைத்திருந்த கத்தியினை எடுத்து சரத்குமார் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர் .போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்த சரத்குமாரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு  செய்த போலீசார் அர்ஜுணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments