Disqus Shortname

அதிமுக சார்பில் கிராம மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்

உத்திரமேரூர் 13/05/2020

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அரசாணிமங்கலம், ஒட்டந்தாங்கல், பூந்தண்டலம், மேனல்லூர், பாரதிபுரம், காட்டுப்பாக்கம், கல்யாணமேடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் 3500 ஏழை, எளிய குடும்பங்களுக்கு ரூ. 7.5 லட்சம் மதிப்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவருமான வாலாஜாபாத் கணேசன் கிராம மக்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் என அத்தியாவசிய பொருட்களை வழங்கி அரசு கூறும் வழிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் போது பொது மக்கள் சமூக இடைவெளியில் நின்று நிவாரணப் பொருட்களை வாங்கிச்சென்றனர். நிவாரண உதவிகள் வழங்கிய அதிமுக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, தருமன், இளைஞரணி நிர்வாகி துரைபாபு, முருகன், நாஞ்சிபுரம் புருஷோத்தமன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் எம்.எஸ்.பெருமாள், பூந்தண்டலம் ராஜேந்திரன், நாராயணன், வெங்கடேசன், விநாயகம், வீர்ராகவன், வேலாயுதம், சங்கர், குப்பன், உதயகுமார், லோகு உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments