Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மாற்றுதிறனாளிகள் வி.ஏ.ஓ அலுவலகத்தில் குடியேறி போராட்டம்

உத்திரமேரூர் 08/05/2020
கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழஙகிட வலியுறுத்தி பல்வேறு அரசுதுறை அலுவலர்களிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் பேரில் அரசு துறை அலுவலர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம், பெருங்கோழி மற்றும் மேல்பாக்கம் ஆகிய கிராமங்களில் மாற்றுதிறனாளிகள் 50 த்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி முக கவசம்  அணிந்தவாறு கிராமங்களில் உள்ள அரசு அலுவலகத்தில் குடியேறும் நூதனப் போராட்டம் நடத்தினர்.  போராட்டத்தின் போது  மாற்றுதிறனாளிகளின் கோரிக்களை உடனே நிறைவேற்றிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மாற்றுதிறனாளிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் என கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் மாற்றுதிறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments