Disqus Shortname

உத்திரமேரூர் அருகே திமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்.

உத்திரமேரூர் 07/05/2020
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டித்த போதிலும் கொரோனா தொற்று தற்போதுசில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொது மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நோய் தொற்று கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அரசு வருவாய் ஈட்டும் எண்ணத்தில் நேற்று முதல் டாஸ் மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் குடிமகன்கள் இடைவெளியின்றி ஒருவருக்கு ஒருவர் கொரோனா தொற்று ஏற்படும் வகையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இதனைக் கண்டித்து உத்திரமேரூர் அருகே மல்லிகாபுரம் கிராமத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ, எம்.பி. சிறுவேடல் செல்வம் ஆகியோர் தலைமையில் தமிழக அதிமுக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், நகர செயலாளர் பாரிவள்ளல், பொறியாளர் அணி நிர்வாகி சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்காமல் டாஸ் மாக் கடையினை திறந்த தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

No comments