உத்திரமேரூர் அருகே வாடாதவூர் கிராமத்தில் அதிமுக சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த வாடாதவூர் கிராமத்தில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சடையாண்டி ஆகியோர் கிராம மக்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக ரூ-5 லட்சம் மதிப்பில் 10 கிலோ அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் என அத்தியாவசிய பொருட்களை வழங்கி அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டி வலியுறுத்தினர். நிகழ்ச்சியில் போது கிராம மக்கள் சமூக இடைவெளியில் நின்று நிவாரணப் பொருட்களை வாங்கிச் சென்றனர். நிவாரண உதவிகள் வழங்கிய தமிழக அதிமுக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்வின் போது கிளைச் செயலர்கள் ராமச்சந்திரன், குமரவேல், லூர்துசாமி மற்றும் வாடாதவூர் கிராம கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments