Disqus Shortname

உத்திரமேரூர் அருகே ராம்கோ நிறுவனம் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்

உத்திரமேரூர் 12/05/2020
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த காட்டுபுத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் ராம்கோ சிமெண்ட் நிறுவனம் சார்பில் காட்டுப்புத்தூர், ஒழையூர், சுண்டுப்பள்ளம், கைத்தண்டலம், புலிப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கினர். இதில் 5 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணை, மளிகைப் பொருள், காய்கறிகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டனர். மேலும் கிராம மக்களுக்கு முககவசம், சோப்பு வழங்கி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில் கிளை மேளாளர் பாலாஜி உட்பட ராம்கோ சிமெண்ட் ஊழியர்கள் கலந்து கொண்டு வீடு வீடாக நிவாரண உதவிகளை வழங்கினர்.

No comments