உத்திரமேரூர் அருகே அதிமுக சார்பில் கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பாலேஸ்வரம், இடையம்புதூர், புலிப்பாக்கம், கிளக்காடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவருமான வாலாஜாபாத் கணேசன் கிராம மக்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் என அத்தியாவசிய பொருட்களை வழங்கி அரசு கூறும் வழிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தினார். மேலும் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் போது பொது மக்கள் சமூக இடைவெளியில் நின்று நிவாரணப் பொருட்களை வாங்கிச்சென்றனர். நிவாரண உதவிகள் வழங்கிய அதிமுக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, தருமன், ஒன்றிய கவுன்சீலர் வெடிஆனந்தன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் தண்டரை தணிகைவேல், திருவந்தவார் முருகன், வேலு, பாலேஸ்வரம் ஜெகதீசன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments