Disqus Shortname

உத்திரமேரூர் பேரூராட்சியில் வசிக்கும் 5000 ஏழை குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்

உத்திரமேரூர் 06/05/2020
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக உத்திரமேரூர் பேரூராட்சியில் வசிக்கும் 5000 ஏழை குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவருமான வாலாஜாபாத் கணேசன் கிராம மக்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் என 15 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி அரசு கூறும் வழிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் போது பொது மக்கள் சமூக இடைவெளியினை கடைபிடித்து நிவாரணப் பொருட்களை வாங்கிச்சென்றனர். நிவாரண உதவிகள் வழங்கிய அதிமுகவிற்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, தங்கபஞ்சாட்சரம், தருமன், முன்னாள் துணை தலைவர் தயாளன், இளைஞரணி நிர்வாகி துரைபாபு, குமார், அ.பிசத்திரம் பெருமாள், சத்தியாநரசிம்மன், பெருங்கோழி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளிமுருகன், ஜெயவேல், சரவணன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments