உத்திரமேரூர் அருகே மகள் பிறந்தநாளை கொரோனா நிவாரண உதவிகள் வழங்கி கொண்டாடிய தந்தை
உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் சத்தியா விவசாயி இவரது மகள் கமலி இவருக்கு நேற்று 11 வது பிறந்தநாள். ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த ஆண்டு பிறந்தநாளில் கோவிலுக்கும் போகவும் முடியாமல் உறவினர் மற்றும் நண்பர்களையும் பார்க்கமுடியாத சூழலில் பிறந்தநாள் விழாவினை ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க முடிவெடுத்தார் சக்திவேல். அதன் பேரில் தனது சொந்த ஊரான ஆலப்பாக்கம் கிராமத்தில் உள்ள 500 குடும்பங்களுக்கும் அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை பிறந்தநாள் கொண்டாடும் தன் குழந்தையின் கைகளால் பொது மக்களுக்கு வழங்கி கொண்டாடினர். இதனால் பிறந்தநாள் கொண்டாடிய குழந்தையை பொது மக்கள் அனைவரும் வாழ்த்திச்சென்றனர். இந்நிகழ்ச்சி கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
No comments