உத்திரமேரூர் அருகே 3000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் எம்.எல்.ஏ. எம்.பி வழங்கினர்.
உத்திரமேரூர் 02/05/2020
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் உத்திரமேரூர் ஒன்றிய திமுகசார்பில் ஒரகாட்டுப்பேட்டை, காவூர், களியப்பேட்டை, காவித்தண்டலம், திருவாணைக்கோவில், ஆண்டித்தாங்கல், திணையாம்பூண்டி, முருக்கேரிமற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 3000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் .எம்.எல்.ஏ மற்றும் காஞ்சி எம்.பி. சிறுவேடல் செல்வம் ஆகியோர் வழங்கினர்.இதில் அரிசி, பருப்பு, எண்ணை, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் என வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் இவர்கள் அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டு பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. கிராமங்களில் பணியாற்றும் துப்புறவு பணியாளர்களுக்கு முககவசம், சானிடைசர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. நிகழ்வின் போது ஆதிதிராவிட நலத்துறை நிர்வாகி துரைவேல், ஒன்றிய செயலாளர்கள் குமார் ஞானசேகரன், விவசாய அணி அமைப்பாளர் ஏழுமலை, பொறியாளர் அணி சசிகுமார், நிர்வாகிகள் வெங்கடேசன், விஜயாபரமசிவம், விஷ்ணு உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments