Disqus Shortname

உத்திரமேரூர் அருகே சொந்த ஊருக்கு சைக்கிளில் சென்ற 16 வடமாநில இளைஞர்களை திருப்பி அனுப்பிய போலீசார்

உத்திரமேரூர் 21/05/2020
உத்திரமேரூர் அடுத்த படூர் மற்றும் ஆனம்பாக்கம் கிராமத்தில் கட்டிட தொழிலில் 16 வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பின்றி உணவின்றி தவித்து வந்தனர் இந்நிலையில் 16 பேரும் வெஸ்ட் பெங்கால் பகுதிக்கு சைக்கிளில் செல்ல முடிவெடுத்தனர். அதன்பேரில் நேற்று காலை சைக்கிளில் புறப்பட்டு திருமுக்கூடல் கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை மடக்கி விசாரித்து அவர்களுக்கு அறிவுரை கூறி படூர் மற்றும் ஆனம்பாக்கத்திற்கே திருப்பி அனுப்பினர்.

No comments