உத்திரமேரூர் அருகே திமுக சார்பில் ரூ. 30 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள்
உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஊரடங்கு
உத்தரவின் காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு திமுக சார்பில் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது அதன்
தொடர்ச்சியாக நேற்று உத்திரமேரூர் அடுத்த ஆலஞ்சேரி, வளத்தோடு,
புத்தளி, புலிவாய், கன்னிகாபுரம், மணல்மேடு, திருப்புலிவனம், மருதம்,
கடல்மங்கலம், மருத்துவான்பாடி, நீரடி, பட்டஞ்சேரி ஆகிய பகுதிகளில்
ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரம்குடும்பங்களுக்கு
ரூ. 30 லட்சம் மதிப்பில் கொரோனா நிவாரண உதவியாக அரிசி, காய்கறி,
மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் காஞ்சி
தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் ஜி.செல்வம் ஆகியோர் பொதுமக்களுக்கு நிவாரண
உதவிகளை வழங்கி பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினர். மேலும்
கிராமங்களில் சுகாதார பணியாளர்களை கௌரவித்து முககவசம், சனிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி நிவாரண உதவிகள் வழங்கினர்.நிகழ்வின்போது ஒன்றிய செயலாளர்கள் டி.குமார், ஞானசேகரன், பாரிவள்ளல்,செயற்குழு உறுப்பினர் நாகன், விவசாய அணி அமைப்பாளர் ஏழுமலை,ஒன்றிய துணை செயலாளர் தமிழ்வேந்தன், பொறியாளர் அணி சசிகுமார்,காளிதாஸ், மாயகிருஷ்ணன், வீராசாமி, ஜெயகுமார், ரத்தினமாலா உட்படநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments