Disqus Shortname

உத்திரமேரூர் அருகே 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உத்திரமேரூர் 02/05/2020
சென்னை கோயம்பேடு மார்கெட் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மை  செய்யும் பணியும் அப்பகுதி பணியாற்றிய பணியாளர்களை பரிசோதனை  செய்யும் பணியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தை சேர்ந்த 10த்திற்கும் மேற்பட்டோர் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி அங்கு வேலை பார்த்துவந்ததாகவும் இவர்கள் சிலதினங்களுக்கு முன்
சொந்த ஊரான பெருநகர் கிராமத்திற்கு வந்துள்ளதாகவும் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் அவர்கள் அனைவருக்கும் இரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் அதில் 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து இவர்கள் வசிக்கும் பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தி வருகிறது. இப்பணியைினை மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் வருவாய்துறை அலுவல்கள் பார்வையிட்டனர். மேலும் சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு தீவிர பரிசோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

No comments