உத்திரமேரூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
உத்திரமேரூர் 28/05/2020
உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட மிஷின் ஸ்கூல் தெருவில் வசிக்கும் 84 வயது மூதாட்டி ஒருவருக்கு கடந்த செவ்வாய்கிழமையன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த பகுதியினை பேரூராட்சித்துறையினர் முழுமையாக அடைத்து தீவிர கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனர். இந்நிலையில் சுகாதாரப்த்துறையினர் மூதாட்டியின் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனார். இதில் 55 வயது மதிக்கத் தக்க ஆண், 25 மற்றும் 23 வயது மதிக்கத் தக்க வாலிபர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் உத்திரமேரூரில் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
No comments