உத்திரமேரூர் அருகே திமுக சார்பில் ரூ. 4 லட்சம் மதிப்பில் 2000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்
உத்திரமேரூர் ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு திமுக சார்பில் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக நேற்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த இடையம்புதூர், பாலேஸ்வரம், ரெட்டமங்கலம், நெல்வேலி, தோட்டநாவல், மலைகாலனி ஆகிய கிராமங்களில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுமார் 2000 குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பில் நிவாரண உதவியாக அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் ஜி.செல்வம் ஆகியோர் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினர். மேலும் கிராமத்தில் உள்ள சுகாதார பணியாளர்கள் அனைவருக்கும் முககவசம், சனிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்வின்போது சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி.குமார், ஒன்றிய துணை செயலாளர் தமிழ்வேந்தன், நிர்வாகிகள் ஏழுமலை, பாண்டியன், சுந்தரமூர்த்தி, மனோகர், ரத்தினமாலா, ஜெயகுமார், கோபி, பூபாலன், கஜபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments