Disqus Shortname

மேம்பால ரவுண்டானா சாலை பணியினை எம்.எல்.ஏ மற்றும் எம்.பி திடீர் ஆய்வு.

உத்திரமேரூர் 22/05/2020
உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமத்தில் மேம்பால ரவுண்டானா கனரக வாகனங்களால் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டது. இந்த ரவுண்டானா மற்றும் சாலையினை சீரமைக்க கிராம மக்கள் தொடர்ந்து  கோரிக்கை விடுத்தனர் கோரிக்கையின் பேரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து
ரூ.45 லட்சம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.36 லட்சம் மொத்தம் ரூ. 81 லட்சம் மதிப்பீட்டில் மேம்பால ரவுண்டானா சாலையினை சீரமைக்கும் பணியானது துவக்கப்பட்டு நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்பணியினை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் ஜி.செல்வம் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தனர். நிகழ்வின் போது சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் நிர்வாகி நடராஜன், ஊராட்சி செயலர்கள் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments