உத்திரமேரூர் அருகே பிறந்து 10 நாளேயான குழந்தையுடன் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி குழந்தை பலி
உத்திரமேரூர் 10/05/2020
உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி 32
இவரது கணவர் வியாசர்பாடியை சேர்ந்த ஜெகன் இவர்களுக்கு 2 மகள், ஒரு
மகன் உள்ளனர். மகாலட்சுமி கணவரை பிரிந்து குழந்தைகளோடு
எல்.எண்டத்தூரில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக இளைஞர் ஒருவருடன் மகாலட்சுமிக்கு
கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெறிகிறது. இதனால் மகாலட்சுமிக்கு கடந்த 10
நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை
பிறந்துள்ளது. பெண் குழந்தையுடன் நேற்று வீட்டிற்கு வந்த மகாலட்சுமியை
பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. சம்மந்தபட்ட இளைஞரையும் தொடர்பு
கொள்ள முடியாமல் போனதால் மனமுடைந்த மகாலட்சுமி உத்திரமேரூர்
அருகே உள்ள மணித்தோட்டம் கிராமத்தில் சாலையோரம் உள்ள விவசாய
கிணற்றில் குழந்தையோடு குதித்துள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர்
தண்ணீரில் தத்தலித்துக் கொண்டிருந்த மகாலட்சுமியை மீட்டனர். குழந்தை
கிணற்றில் மூழ்கியது. இதையடுத்து உத்திரமேரூர் தீயணைப்புதுறை மற்றும்
காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில்
தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பல மணிநேரம் போராடி
குழந்தையின் உடலை மீட்டனர். உத்திரமேரூர் போலீசார் குழந்தையின்
உடலை பிரோதப் பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி 32
இவரது கணவர் வியாசர்பாடியை சேர்ந்த ஜெகன் இவர்களுக்கு 2 மகள், ஒரு
மகன் உள்ளனர். மகாலட்சுமி கணவரை பிரிந்து குழந்தைகளோடு
எல்.எண்டத்தூரில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக இளைஞர் ஒருவருடன் மகாலட்சுமிக்கு
கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெறிகிறது. இதனால் மகாலட்சுமிக்கு கடந்த 10
நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை
பிறந்துள்ளது. பெண் குழந்தையுடன் நேற்று வீட்டிற்கு வந்த மகாலட்சுமியை
பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. சம்மந்தபட்ட இளைஞரையும் தொடர்பு
கொள்ள முடியாமல் போனதால் மனமுடைந்த மகாலட்சுமி உத்திரமேரூர்
அருகே உள்ள மணித்தோட்டம் கிராமத்தில் சாலையோரம் உள்ள விவசாய
கிணற்றில் குழந்தையோடு குதித்துள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர்
தண்ணீரில் தத்தலித்துக் கொண்டிருந்த மகாலட்சுமியை மீட்டனர். குழந்தை
கிணற்றில் மூழ்கியது. இதையடுத்து உத்திரமேரூர் தீயணைப்புதுறை மற்றும்
காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில்
தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பல மணிநேரம் போராடி
குழந்தையின் உடலை மீட்டனர். உத்திரமேரூர் போலீசார் குழந்தையின்
உடலை பிரோதப் பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments