உத்திரமேரூர் அருகே ரூ. 5 லட்சம் மதிப்பில் ஆயிரம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்
உத்திரமேரூர் அடுத்த தோட்டநாவல் கிராமத்தில் உள்ள ரைசிங் ஸ்டார் அவுட் ரீச் ஆப் இந்தியா சார்பில் ஊரக வளர்ச்சித்துறையுடன் இணைந்து உத்திரமேரூர் சுற்றியுள்ள வினோபாநகர், சின்னமாங்குளம், ரெட்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய சுமார் 1000 குடும்பங்களுக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பில் கொரோனா நிவாரண உதவியாக 10 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள், சமையல் எண்ணை, சர்க்கரை மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. மேலும் கிராமங்களில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு முககவசம், சானிடைசர் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரைசிங் ஸ்டார் அவுட் ரீச் ஆப் இந்தியா நிர்வாகிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments