Disqus Shortname

உத்திரமேரூரில் கொரோனா பாதிப்பு பொது மக்கள் பீதி

உத்திரமேரூர் 27/05/2020
உத்திரமேரூர் அடுத்த ஒரகாட்டுப்பேட்டை கிராமத்தில் வசிக்கும் 47
வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கடந்த வாரம் உடல் நலக்குறைவு
காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த நபருக்கு சந்தேகத்தின்
பேரில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில்
கொரோனா தொற்று உறுதியானது இதையடுத்து அவர்களின் குடும்ப
உறுப்பினர்கள் அனைவருக்கும் சுகாதாரத் துறையினர் கொரோனா
பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 42 வயது நபர் ஒருவருக்கும், அவரது
13 வயது மகன் மற்றும் 9 வயது மகளுக்கும் கொரோனா தொற்று
உறுதியானது. இதையடுத்து அவர்கள் செங்கல்பட்டில் தனிமைப்படுத்தி
சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று உத்திரமேரூர்
பேரூராட்சிக்குட்பட்ட மிஷன் ஸ்கூல் தெருவில் வசிக்கும் 80 வயது மதிக்கத்
தக்க மூதாட்டி உடல் நலக்குறைவு காரணமாக வேலூர் மருத்துவமனைக்கு
அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று
பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து
பேரூராட்சி நிர்வாகம் அந்த தெருவினை இருபுறமும் மூடி துப்புறவு பணியில்
ஈடுபட்டு, அவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் தீவிர விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.

No comments