Disqus Shortname

உத்திரமேரூர் அருகே 110 பழங்குடியின குடும்பங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கொரோனா நிவாரண உதவி

உத்திரமேரூர் 30/04/2020
உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின
மக்கள் கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசியல் பிரமுகர்கள் தன்னார்வலர்கள் சிலர்
உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக உள்ள பொன்ராமு களியாம்பூண்டி கிராமத்தில் வசிக்கும் 110 பழங்குடியின குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக 5 கிலோ அரிசி, காய்கறி, பிஸ்கட், பிரடு மற்றும் முககவசம் சோப்பு உள்ளிட்டவைகள் வழங்கினார். பின்னர் சமூக விலகல் மற்றும் தன் சுத்தம் குறித்து விளக்கி கூறினார். நிகழ்வின் போது உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் விநாயகம் உட்பட காவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

No comments