Disqus Shortname

உத்திரமேரூர் அருகே ஏழை, எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் எம்.எல்.ஏ. எம்.பி வழங்கினர்.

உத்திரமேரூர் 29/04/2020
உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கால் பாதிப்புக்குள்ளானகுடும்பங்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக உத்திரமேரூர் அடுத்த அழிசூர் மற்றும் களியாம்பூண்டி கிராமங்களில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் .எம்.எல்.ஏ மற்றும் காஞ்சி எம்.பி. சிறுவேடல் செல்வம் ஆகியோர் வழங்கினர். இதில் அரிசி, பருப்பு, எண்ணை, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் என வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் இவர்கள் அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டு பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், செயற்குழு உறுப்பினர் நாகன், விவசாய அணி அமைப்பாளர்கள் ஏழுமலை, பொறியாளர் அணி சசிகுமார், ருத்ரகோட்டி உட்பட பலர் கலந்து கொண்
டனர்.

No comments