Disqus Shortname

கிராம சாலை வளைவில் எச்சரிக்கை பலகை இல்லை

உத்திரமேரூர் 06/01 2020:
களியாம்பூண்டி - பெருநகர் சாலை வளைவில், எச்சரிக்கை பலகை இல்லாததால், வாகன ஓட்டிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி - -பெருநகர் சாலையில், களியாம்பூண்டி மின் வாரிய அலுவலகத்தை கடந்து, சிறிது துாரம் சென்றவுடன், அபாயகரமான சாலை வளைவு உள்ளது.வாகன ஓட்டிகளுக்கு, சாலை வளைவு குறித்து எச்சரிக்கும் வகையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், அடுத்தடுத்து இரு இடங்களில் சாலை வளைவு குறீயீடு அறிவிப்பு பலகை அமைத்திருந்தது. தற்போது, இரு இடங்களிலும், அறிவிப்பு பலகையை தாங்கிப் பிடிக்கும் இரும்பு சட்டகம் மட்டும் உள்ளன. அதில், வளைவு குறித்த குறியீடு பலகை இல்லை.மேலும், மின்விளக்கு இல்லாத அப்பகுதியில், இரவு நேரத்தில் அப்பகுதியில் வேகமாக வரும் வாகன ஓட்டிகளால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே விபத்தை தவிர்க்க சாலை வளைவு குறித்து எச்சரிக்கை பலகை அமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

No comments