Disqus Shortname

உத்திரமேரூரில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி

உத்திரமேரூர் 23/01/2020
உத்திரமேரூர் பேரூராட்சியில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி  விழிப்புணர்வு பேரணி  நடந்தது. பேரணியில் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர்  விநாயகம் கலந்து கொண்டு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் போலீசார் மற்றும் வியாபாரிகள் தலைகவசம் அணிந்தவாறு இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாகன ஓட்டிகளிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது அம்பேத்கர் சிலை அருகே துவங்கி பஜார் வீதி, சன்னதி தெரு, பெரிய நாராசம்பேட்டை தெரு, கைலாசநாதர் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது பள்ளியில் முடிவடைந்தது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் ஓட்டுநர் சங்க நிர்வாகிகள், மாணவியர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments