Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பெற்றோர்கள் கண்டித்ததால் பூச்சு மருத்து குடித்து கல்லூரி மாணவி பலி

உத்திரமேரூர் 05/01/2020
உத்திரமேரூர் அடுத்த இளநகர் கிராமத்தில் வசிப்பவர் சித்திரைவேலு விவசாயி. இவரது மகள் தேவிபிரியா 19 இவர் திருப்புலிவனத்தில் உள்ள அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதால் இவரது பெற்றோர்கள் தினமும் இவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறைக்கு பிறகு கல்லூரி திறக்கப்பட்டது. கல்லூரிக்கு சென்று வீடு திரும்பிய தேவிப்பிரியாவை பெற்றோர்கள் வேலை  செய்யமாமல் உள்ளதாக கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த தேவிப்பிரியா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து அருந்தி அங்கேயே மயக்கமடைந்துள்ளார்.  இதைக்கண்ட பெற்றோர் தேவிப்பிரியாவை மீட்டு மானாம்பதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் தேவிப்பிரியா சிகிச்சை பயனின்றி  உயிரிழந்தார். இது குறித்து பெருநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் பெருநகர் போலீசார் தேவிப்பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments