Disqus Shortname

உத்திரமேரூர் அருகே இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் திறப்பு

உத்திரமேரூர் 04/01/2020
உத்திரமேரூர் அடுத்த குரும்பிறை கிராமத்தில் திமுக சார்பில் கடந்த ஆண்டில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் குரும்பிறை கிராம இளைஞர்கள் தங்களது உடல் திறனை மேம்படுத்திடும் வகையில் குரும்பிறை கிராமத்திலேயே உடற்பயிற்சிக் கூடம் அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையின் பேரில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ உத்தரவின் பேரில்
குரும்பிறை கிராமத்தில் சுமார் ரூ 5.5 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் குரும்பிறை கிராமத்தில் புதியதாக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது விழாவில் ஒன்றிய செயலாளர்கள் டி.குமார், ஞானசேகரன் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் மினாதாஸ், முத்து, கருணாகரன், மாணவரணி முரளி, பொறியாளரணி சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றனர். விழாவில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட  செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு இளைஞர்களின் பயன்பாட்டிற்கு உடற்பயிற்சிக் கூடத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் திமுக  நிர்வாகிகள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments