Disqus Shortname

உத்திரமேரூரில் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 145 பேர் விலகி அதிமுகவில் இணைந்தனர்.

உத்திரமேரூர் 19/01/2020
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் பலர் விலகி தங்களை அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக உத்திரமேரூர் அருகே குப்பையநல்லூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேனல்லூர், காட்டுப்பாக்கம், குருவாடி, குப்பையநல்லூர், அத்தியூர் மற்றும் மேல்தூளி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து திமுக, காங்கிரஸ் விசிக உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 145 பேர் அக்கட்சியிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதில் அதிமுக நிர்வாகி தமிழ்செல்வன், பெருமாள் தலைமையில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 145 பேர் தங்களை அதிமுகவில் இணைந்துக் கொண்டனர். அதிமுகவில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்தினர். மேலும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாக பணியாற்றி அதிமுக அதிக அளவில் வெற்றி பெறபாடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, தங்கபஞ்சாட்சரம், தருமன், இளைஞரணி நிர்வாகி துரைபாபு, நிர்வாகிகள் எம்.கே.பி வேலு, அ.பி.சத்திரம் பெருமாள், கருணாநிதி, ராஜாமணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்


No comments