Disqus Shortname

உத்திரமேரூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் எம்.எல்.ஏ க.சுந்தர் துவக்கி வைத்தார்.

உத்திரமேரூர் ஜன, 19
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் பேரூந்து நிலையத்தில் போலியோ
சொட்டு மருந்து முகாம் இன்று காலை துவங்கியது. முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் (பொருப்பு) டாக்டர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சாலவாக்கம் சுகாதார நிலைய மருத்துவர்கள் மஞ்சுளா, மோனிகா, குட்டி ஒன்றிய செயலாளர் குமார், நிர்வாகிகள் வெங்கடேசன், முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார மேற்பார்வையாளர் தாமரைச்செல்வன், ஊராட்சி செயலர் சக்திவேல் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் காஞ்சி  தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு  குழந்தைகளுக்கு போலியோ செட்டு மருந்து கொடுத்து முகாமினை துவக்கி வைத்தார். இம்முகாமில் உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, பஸ் நிலையங்கள், கோவில்கள், அங்கன்வாடி மையம் என மொத்தம் 127 மையங்கள் அமைக்கப்பட்டது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ செட்டு மருந்து வழங்கப்பட்டு வருகின்றனர்.

No comments